Breaking News

மாவீரன் அலெக்சாண்டரின் கடைசி விருப்பம்?

மாவீரன் அலெக்சாண்டரின் கடைசி விருப்பம்?

மாவீரன் அலெக்சாண்டரின் கடைசி விருப்பம்?

நீங்கள் படித்தது, சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்தது… இவற்றை ஓர் அந்தஸ்து என்று நினைப்பதே முட்டாள்தனம்.
வேறு ஒருவர் அவருடைய திறமைக்கு ஏற்றபடி சமூகத்தில் வேறு ஒரு கட்டத்துக்குப் பயணமானார்கள், அவ்வளவுதான்.
பல சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றிய பின், வெற்றிக் களிப்பில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முனைந்தான் அலெக்ஸாண்டர்.
தன் தாயின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறாமல் மரணம் அடையப்போகிறோம் என்று அலெக்ஸாண்டருக்குப் புரிந்தது.
என் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் இடுகாடு வரையில் முத்தும், மணியும் நான் வெற்றிக்கொண்ட மற்ற நவரத்தினங்களும் தூவப்பட வேண்டும்.
என்னுடைய இரண்டு கைகளும் வெளியே ஊசலாடும்படிதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும்’.
தளபதிகள் கண்ணீரோடு மண்டியிட்டனர் ‘மாமன்னா, இந்த விசித்திர ஆசைகளின் நோக்கம் என்ன?
’ அலெக்ஸாண்டர் சொன்னான், ‘வாழ்வில் நான் கற்றுக்கொண்ட மூன்று முக்கியப் பாடங்களை மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போக விரும்புகிறேன்.
எப்பேர்ப்பட்ட மாமன்னனாக இருந்தாலும், மருத்துவர்களால் அவன் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்கவேண்டும் என்றேன்.
ஒரு குன்றிமணிகூட என்னுடன் வரப்போவது இல்லை என்பதைத் தெரிவிக்கவே வழியெங்கும் நவரத்தினங்களைச் சிதறடிக்கச் சொன்னேன்.
விட்டுப் போகும்போதும், ஒன்றும் அற்றவனாகப் போகிறேன் என்பதை, சவப்பெட்டிக்கு வெளியே ஊசலாடும் என் திறந்த கைகள் மக்களுக்குச் சொல்லட்டும்’ என்றான் அலெக்ஸாண்டர்.
உங்களுடன் பள்ளிக்கூடத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், ஒரு கட்டத்துக்குப்பின் நண்பர்களாகத் தொடர வாய்ப்பு இல்லாமல் வெவ்வேறு பாதைகளில் போயிருக்கலாம்.
இப்போதும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வெவ்வேறு தனித்தனியான நோக்கங்களுடன் வெவ்வேறுவிதமாக வாழ்ந்து இன்றைய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
அந்த வித்தியாசங்களை அப்படியே பார்க்கத் தெரியாமல், அந்தஸ்துடன் தொடர்புப்படுத்துவது என்பது ஒருவித அகங்காரம்.
நண்பராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், அவரைச் சமமாக நினைப்பதே ஒரு பேருதவி போல் எண்ணுவது ஒருவிதமான நோய்.
அந்த அகங்காரமான நோயினால் எப்பேர்ப்பட்ட செயல்கள் வேண்டுமானாலும் செய்யத் துணிவு வரும்.
ஆலமரமும் தென்னை மரமும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று நிரூபிக்க முயல்வது இல்லை.
பனை மரமும், மா மரமும் யாருக்குக் கிளைகள் அதிகம் என்று சண்டையிட்டுக் கொள்வதில்லை.
அதிகாரம், பதவி, செல்வம், அதற்கான அந்தஸ்து எல்லாமே மனிதனுக்கு ஏதோ ஒரு திறமையினால் வந்திருக்கலாம்.
எதற்கெல்லாம் உபயோகப்படுத்தக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளும் கூடுதல் திறமையும் அவனுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.
அந்தத் தெளிவு இருந்தால், நெருங்கி வருபவர்களை விலக்கி ஒரு தொலைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
உங்கள் நிலையைத் தவறாகப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கும் அது சரியல்ல என்பதை அன்புடன் புரியவைக்க முடியும்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..