Breaking News

வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்?

வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்?

வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்?

வீட்டுத் தோட்டம் உங்களுடைய காய்கறி மற்றும் பழத் தேவைகளை, உங்கள் வீட்டுப் பின்புறத் தோட்டங்களிலேயே அவற்றைப் பயிரிட்டு, உங்கள் சமையலறை மற்றும் குளியலறைக் கழிவு நீரைப் பாய்ச்சி விளைவிக்க முடியும்.
முருங்கை, பப்பாளி, நெல்லி, கொய்யா, கறிவேப்பிலை, அகத்தி போன்றவற்றை தோட்டத்தின் ஒரு பக்கத்தில் பயிரிடுவதன் மூலம், அவற்றின் நிழல் மற்ற செடிகளை மறைக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள முடியும்.
சுலபமாக வீட்டைச் சுற்றி வளர்க்கக் கூடிய சில மர வகைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன: முருங்கை – புரோட்டின், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் நிரம்பியது.
ஜீரணசக்தியை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்கிறது.
நெல்லி – வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையோடு இருக்கச் செய்கிறது.
கறிவேப்பிலை – பசியின்மையைப் போக்குகிறது, கர்ப்பிணிப் பெண்களின் மசக்கை பிரச்சனைக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
வேப்பிலை – வறண்ட சருமத்தை மென்மையாக்கி, தோல் அரிப்பைப் போக்குகிறது.
பிரண்டை – ஜீரணசக்திக்கு நல்லது, பெண்களுக்கு அவசியமான கால்சியம் சத்து நிறைந்தது.
வாழை – வாழையின் ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
வாழைத் தண்டு மிகுந்த நார்ச்சத்து உடைய, பொட்டாசியம் நிறைந்த உணவு.
கீரைகள் குறுகிய காலத்தில் விளையக் கூடிய கீரைகளை தோட்டத்தின் நடைபாதைக்கு அருகே பாத்தி கட்டி வளர்க்கலாம்.
முளைக் கீரை – மலச்சிக்கலைப் போக்கி, சொறி நோயை குணமாக்குகிறது.
மணத்தக்காளி கீரை – வாயுத் தொல்லை, அல்சர், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..