Breaking News

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள்?

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள்?

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள்?

இயற்கையின் படைப்புகள் எப்போதும் நீங்கள் நினைப்பது போல வெளி வருவதில்லை.
ஒரு சர்வதேச விளையாட்டு வீரருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் நடப்பதும், ஓடுவதும் குறைபாடாகத்தான் தெரியும்.
குறிப்பிட்ட அளவு புத்திசாலியான ஒரு மனிதனுடன் ஒப்பிட்டால், தங்களை நல்ல மன நலத்துடன் இருப்பதாக எண்ணிக் கொள்பவர்களும், மருத்துவ ரீதியாக இயல்பான மன நலம் உள்ளவர்கள் என்று சான்றளிக்கப்படுபவர்களும் கூட சற்று குறைபாடு உள்ளவர்களாகத்தான் தெரிவார்கள்.
ஒரு மனித உடலால் எப்படியெல்லாமோ செய்ய முடிந்து, உங்களால் இப்படி மட்டும்தான் செய்ய முடியும் என்றால், உங்களுக்கு குறிப்பிட்ட அளவு குறைபாடு இருப்பதாகத்தானே அர்த்தம்.
ஆனால் உங்களைச் சுற்றி இதே அளவு குறைபாடுகள் உள்ள மனிதர்கள் நிறைந்திருப்பதால், இதை சாதாரணம் என்று கூறுகிறீர்கள்.
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றைச் செய்யும் அளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நிர்ணயித்து, அதை ஒருவரால் செய்ய முடியாமல் போனால், நீங்கள் அவர்களுக்கு முத்திரை குத்தினால், குறைபாடு அந்தக் குழந்தைக்கு இல்லை, இந்த சமுதாயத்திற்குத்தான்.
அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான கவனமும், அக்கறையும் கொடுப்பது உங்கள் குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அந்த முத்திரை, அந்த குழந்தைக்கு உதவுவதை விட இன்னும் அதிகமான சேதத்தை விளைவிக்கிறது.
நமது தொழிற்சாலைகளின் உற்பத்தியை பெருக்க, இயந்திரங்கள் மட்டும்தான் உபயோகப்படும் என்று முடிவு செய்து எப்படி சில மனிதர்களை நாம் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரிக்கிறோமோ, அப்படி குழந்தைகளை முத்திரை குத்துவது கொடூரமான குற்றம்.
இதுவே இந்தக் குழந்தைகள் பழங்குடி இனத்தில் பிறந்திருந்தால், அந்த இனத்தின் மூத்தவர்கள், “இந்தக் குழந்தையால் இதை மட்டும்தான் செய்ய முடியும்” என்று புத்திசாலித்தனமாக யோசித்திருப்பார்கள்.
அவர்களை முத்திரை குத்தாமல் இருந்திருந்தால், இது மிகவும் சுலபமாக இருந்திருக்கும்.
ஆனால் நீங்கள் எல்லோருக்கும் ஒரே விதமான முறைகளைக் கையாள்வதால், ஒரே விதமான வழியில்தான் எல்லோரையும் போகச் சொல்வீர்கள்.
எல்லோரும் ஒரே அளவான வடிவத்தில்தான் வெளிவர வேண்டும், ஒரே பட்டம், ஒரே முட்டாள்தனம்.
குழந்தைகளை முத்திரை குத்துவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் அவர்கள் எங்கே சுலபமாகப் பொருந்துவார்கள் என்பதைப் பார்த்து, அதை ஆனந்தமாகச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தினால், அவர்கள் நன்றாக இருப்பார்கள்.
இதிலிருந்து பல குழந்தைகள் வெற்றிகரமாக வெளியே வந்துவிட்டாலும், இந்த கல்வி கற்கும் முறை அவர்களில் பலருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்துள்ளது.
நசுக்கப்படுகின்றன என்று நான் சொல்வது, அவர்கள் மேல் உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், தத்துவங்கள், நம்பிக்கைகள், மதங்கள் போன்ற எல்லா முட்டாள்தனங்களையும் திணிப்பதைத்தான் கூறுகிறேன்.
வேறு வழியில்லாமல், நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, உங்களை எதிர்பார்த்து இருப்பதனால், உங்களது பெற்றோர் உங்களுக்குக் கொடுத்த, உருப்படியில்லாத எல்லா முட்டாள்தனங்களையும் அவர்கள் மேல் நீங்கள் திணித்து விடுகிறீர்கள்.
குழந்தைகளை முத்திரை குத்துவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் அவர்கள் எங்கே சுலபமாகப் பொருந்துவார்கள் என்பதைப் பார்த்து, அதை ஆனந்தமாகச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தினால், அவர்கள் நன்றாக இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..